sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பார்த்தசாரதி பெருமாளுக்கு பிரம்மோற்சவம்

/

பார்த்தசாரதி பெருமாளுக்கு பிரம்மோற்சவம்

பார்த்தசாரதி பெருமாளுக்கு பிரம்மோற்சவம்

பார்த்தசாரதி பெருமாளுக்கு பிரம்மோற்சவம்


ADDED : ஏப் 21, 2024 12:06 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம், வரும் 23ம் தேதி காலை 8:00 மணி முதல் 8:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

முன்னதாக, 22ம் தேதி மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம், சேனை முதன்மையார் நிகழ்வு நடக்கின்றன.

வரும் 24ம் தேதி காலை 6:15 மணிக்கு சேஷ வாகனத்தில் பரமபதநாதன் திருக்கோலக் காட்சி நடக்கிறது. அன்று இரவு 7:45 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நடக்கிறது.

விழாவின் மூன்றாம் நாள் காலை 5:15 மணிக்கு கோபுர தரிசனதுடன் கருட சேவை உற்சவம் நடக்கிறது. அன்று பகல் 12:00 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7:45 மணிக்கு அம்ச வாகன புறப்பாடும் நடக்கின்றன.

நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை 27ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 8:30 மணிக்கு அனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது.

விழாவின் முக்கிய நாளான 29ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் பெருமாள் தேரில் எழுந்தருள்கிறார். 0

காலை 7:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது. மே 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us