/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்த்தசாரதி பெருமாளுக்கு பிரம்மோற்சவம்
/
பார்த்தசாரதி பெருமாளுக்கு பிரம்மோற்சவம்
ADDED : ஏப் 21, 2024 12:06 AM
சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம், வரும் 23ம் தேதி காலை 8:00 மணி முதல் 8:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
முன்னதாக, 22ம் தேதி மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம், சேனை முதன்மையார் நிகழ்வு நடக்கின்றன.
வரும் 24ம் தேதி காலை 6:15 மணிக்கு சேஷ வாகனத்தில் பரமபதநாதன் திருக்கோலக் காட்சி நடக்கிறது. அன்று இரவு 7:45 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நடக்கிறது.
விழாவின் மூன்றாம் நாள் காலை 5:15 மணிக்கு கோபுர தரிசனதுடன் கருட சேவை உற்சவம் நடக்கிறது. அன்று பகல் 12:00 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7:45 மணிக்கு அம்ச வாகன புறப்பாடும் நடக்கின்றன.
நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை 27ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 8:30 மணிக்கு அனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது.
விழாவின் முக்கிய நாளான 29ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் பெருமாள் தேரில் எழுந்தருள்கிறார். 0
காலை 7:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது. மே 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

