sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டூழியம்

/

பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டூழியம்

பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டூழியம்

பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டூழியம்


ADDED : ஜூலை 14, 2024 12:27 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், மேற்கு தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரிக்கு தடம் எண்: 51 என்ற மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல், தாம்பரத்தில் இருந்து பயணியருடன் பேருந்து புறப்பட்டது. பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டினார். சேலையூர் நிறுத்தத்தில் நின்று புறப்பட்டபோது, சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தனர்.

ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி, மாணவர்களை கீழே இறங்குமாறு கண்டித்துள்ளார். பின், பேருந்து புறப்பட்டு சிறிது துாரம் சென்றதும், அம்மாணவர்கள் கற்களை எடுத்து பேருந்தின் பின்புறம் கண்ணாடி மீது வீசினர். இதில், கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணியருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us