ADDED : ஆக 07, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் மேம்பாலத்தில், ஆவடியில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த லோடு வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில், வேனில் இருந்த இயந்திரம் மற்றும் பேரல்கள் சாலையில் சிதறி விழுந்தன. ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தால், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் சென்னை புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து, மீட்டு பணியில் ஈடுபட்டனர். பின், கிரேன் வரவழைக்கப்பட்டு, சாலையில் கவிழ்ந்த வேனை துாக்கி அப்புறப்படுத்தினர்.
