ADDED : ஜூலை 19, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே திருமழிசையைச் சேர்ந்தவர் முனுசாமி, 52; தச்சு தொழிலாளி. நேற்று, பணி முடித்து ரவி, 37, என்பவருடன், பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை கூட்டுச்சாலை அருகே, பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் விழுந்தனர்.
முனுசாமி மீது லாரி ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், முனுசாமி உடலை மீட்டனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை தேடுகின்றனர்.