sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இணை கமிஷனர் அலுவலகத்தில் கார்கள் உடைப்பு... போலீசார் பீதி! : ஆய்வாளருக்கு மிரட்டல்; காவலர்கள் மீது தாக்குதல்

/

இணை கமிஷனர் அலுவலகத்தில் கார்கள் உடைப்பு... போலீசார் பீதி! : ஆய்வாளருக்கு மிரட்டல்; காவலர்கள் மீது தாக்குதல்

இணை கமிஷனர் அலுவலகத்தில் கார்கள் உடைப்பு... போலீசார் பீதி! : ஆய்வாளருக்கு மிரட்டல்; காவலர்கள் மீது தாக்குதல்

இணை கமிஷனர் அலுவலகத்தில் கார்கள் உடைப்பு... போலீசார் பீதி! : ஆய்வாளருக்கு மிரட்டல்; காவலர்கள் மீது தாக்குதல்

5


ADDED : பிப் 23, 2025 10:45 PM

Google News

ADDED : பிப் 23, 2025 10:45 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் சிக்கி வரும் நிலையில், வடசென்னையில், போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் புகுந்து கார் கண்ணாடிகள் உடைப்பு, ஆய்வாளருக்கு மிரட்டல், போலீஸ்காரரின் கால் எலும்பு முறிவு உள்ளிட்ட அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதனால், 'மக்களுக்கு பாதுகாப்பு தரும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லையோ' என, போலீசார் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், சென்னை மாநகர காவல் துறையின், வடக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம் உள்ளது. அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம், மர்ம நபர் ஒருவர் இணை ஆணையர் அலுவலகத்தில் புகுந்து போலீஸ் அதிகாரிகளின் கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளார்.

சம்பவம் குறித்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, தண்டையார்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்த சிதம்பர பாண்டியன், 42, என்பவரை கைது செய்துள்ளனர். ஐ.பி.எஸ்., அதிகாரி பணிபுரியும் இடத்திலேயே பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி இருப்பதை, இச்சம்பவம் சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்ததாக, காசிமேடு காவல் நிலையத்தில், சட்ட ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிபவர் வசந்தராஜா.

இவர், ஹிந்து அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காசிமேடு, ஜி.எம்.பேட்டை அரசு குடியிருப்பு பகுதியில் நடந்துவரும் பள்ளிவாசல் கட்டுமான பணியை தற்காலிகமாக நிறுத்தினார்.

இதனால், கடந்த 21ம் தேதி, வண்ணாரப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின், 17ம் ஆண்டு துவங்க விழா கூட்டத்தில் பேசிய, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலர் அஜ்மல், இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, ஆய்வாளர் வசந்தராஜா அளித்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார், அஜ்மல் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், டி.ஜி.பி., அலுவலகத்தில், உளவுத்துறையான எஸ்.பி.சி.ஐ.டி.,யில் தலைமை காவலராக பணிபுரிபவர் பாலசுப்பிரமணியன், 39.

இவர், நேற்று முன்தினம் பணி முடித்து, நள்ளிரவில் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றார்.

பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில் சென்றபோது, அதிக வேகமாகச் சென்ற வட மாநில வாலிபர், பாலசுப்பிரமணியன் வாகனத்தில் மோதிவிட்டு சென்றுள்ளார்.

இவரை பாலசுப்பிரமணியன் பின் தொடர்ந்து சென்று, யானைகவுனி ஜெனரல் முத்தையா தெருவில் பிடித்து விசாரித்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர், பொதுவெளியில் ஏன் சண்டை போடுகிறீர்கள் என, கேட்டுள்ளார். இவரிடம், தலைமை காவலர் என, பாலசுப்பிரமணியன் தன்னை அறிமுகம் செய்துள்ளார்.

அப்போது, கேள்வி கேட்ட நபர், நான் வடக்கு கடற்கரை காவல் நிலைய நுண்ணறிவு காவலர் என, கூறியுள்ளார். அப்போது இருவரும் அடையாள அட்டையை கேட்டு, வாக்குவாதம் செய்து மோதிக்கொண்டனர்.

பணி முடிந்து அவ்வழியே, ஒரு பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பூக்கடை போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., ஜோசப், நுண்ணறிவு பிரிவு காவலர் மகாராஜனுடன் சேர்ந்து, பாலசுப்பிரமணியனை எட்டி உதைத்து, கீழே தள்ளினார்.

இதில், பாலசுப்பிரமணியனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அரசு ஸ்டான்லி அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, தற்போது தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து, ஜோசப், மகாராஜன் ஆகியோரிடம் யானைகவுனி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏற்கனவே, சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போலீசார், பெண்ணுக்கு பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல், 20 லட்சம் ரூபாய் வழிப்பறி என, குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது, போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், இச்சம்பவங்கள் நடந்துள்ளன.

ரயிலில் பெண்ணிடம் நகை திருடிய போலீஸ்காரர் கைது


சென்னை சூளைமேட்டை சேர்ந்த, துணை நடிகையான, 30 வயது பெண், தாய், சித்தி மற்றும் தங்கையுடன், கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு சென்றுள்ளார். மைசூரில் இருந்து, சென்னை வரை இயக்கப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் நேற்று பயணம் செய்தார்.இந்த ரயில், நேற்று காலை, 6:00 மணியளவில் அம்பத்துார் - திருமுல்லைவாயல் இடையே வந்தபோது, பையை தோளில் மாட்டியபடி உறங்கினார். அந்த பையில், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம், தோடு மற்றும் கடிகாரம் இருந்தன.அதே பெட்டியில் நின்றபடி பயணம் செய்த வாலிபர் ஒருவர், பெண்ணின் பையை திருடி, தன் பைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.
திடீரென கண் விழித்த பெண் பயணி, நகை பை காணாமல் போனது பற்றி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.சுதாரித்த வாலிபர், நகை பையை ஜன்னல் வழியாக துாக்கி வீசினார். மற்ற பயணியர் வாலிபரை பிடித்தனர். அவர் வீசிய பையை எடுத்து பார்த்தபோது அதில் நகைகள் இருந்தன. பின் அந்த வாலிபர், சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், வேலுாரை சேர்ந்த வசந்தகுமார், 33, என்பதும், சென்னை ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றுவதும் தெரியவந்தது. தற்போது, அயல்பணியாக சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு ஆய்வாளரின் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. சம்பவத்தன்று போலீஸ் எனக்கூறி, முன் பதிவு ரயில் பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளார்.போலீசார் வசந்தகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us