sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பா.ஜ., நிர்வாகி கணவரை வெட்டியதாக பொய்யாக சரணடைந்தோர் மீது வழக்கு

/

பா.ஜ., நிர்வாகி கணவரை வெட்டியதாக பொய்யாக சரணடைந்தோர் மீது வழக்கு

பா.ஜ., நிர்வாகி கணவரை வெட்டியதாக பொய்யாக சரணடைந்தோர் மீது வழக்கு

பா.ஜ., நிர்வாகி கணவரை வெட்டியதாக பொய்யாக சரணடைந்தோர் மீது வழக்கு


ADDED : ஜூன் 17, 2024 01:50 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்:அண்ணா நகர், தங்கம் காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 45. இவரது மனைவி நதியா, 41; வழக்கறிஞர். இவர், பா.ஜ.,வில் மகளிர் அணி மாநில பொதுச் செயலராக உள்ளார்.

கடந்த 14ம் தேதி மாலை சீனிவாசன், அண்ணா நகர் தங்கம் காலனி ஆறாவது அவென்யூ வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அவரை வெட்டி விட்டு தப்பியது.

இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரித்த நிலையில், சீனிவாசனை வெட்டியதாக நேற்று முன்தினம், 7 பேர் சரணடைந்தனர்.

விசாரணையில் இவர்கள், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த், 28, மகேஷ்குமார், 40, கணேஷ் குமார், 40, ராஜேஷ், 38, நரேந்திரன், 30, சிவகுமார், 42, மற்றும் பிரகாஷ், 41, என தெரிந்தது.

கடந்த 2005ம் ஆண்டு, சவுகார்பேட்டையில் நெடுஞ்செழியன் என்ற ரவுடியை கொலை செய்ததற்கு பழி வாங்க, சீனிவாசனை வெட்டியது தெரிந்தது.

இதில், ரவுடிகளான சிவகுமார், 42, மற்றும் பிரகாஷ், 41, ஆகிய இருவரும், சீனிவாசனை வெட்டாமல், பொய்யாக சரணடைந்து உள்ளனர்.

தங்களை அப்பகுதியில் பெரிய ரவுடிகளாக காட்டிக் கொள்ள, இவ்வாறு செய்துள்ளது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது, பொய்யாக சரணடைந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us