sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கல்யாண வரதராஜர் கோவிலில் 17 ஆண்டுக்கு பின் தேர் திருவிழா

/

கல்யாண வரதராஜர் கோவிலில் 17 ஆண்டுக்கு பின் தேர் திருவிழா

கல்யாண வரதராஜர் கோவிலில் 17 ஆண்டுக்கு பின் தேர் திருவிழா

கல்யாண வரதராஜர் கோவிலில் 17 ஆண்டுக்கு பின் தேர் திருவிழா


ADDED : மே 26, 2024 12:23 AM

Google News

ADDED : மே 26, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரமோற்சவம், 2-0ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, கருடசேவை 22ம் தேதி நடந்தது.

கருடசேவையின்போது, சப்பரத்தின் தண்டு உடைந்து சுவாமி கீழே சரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வைகாசி பிரம்மோற்சவத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், இன்று காலை 6:-00 மணிக்கு நடக்கிறது.

கோவிலுக்கு தனித்தேர் இல்லாததால், மண்ணடி, பக்தவச்சலம் பெருமாள் கோவில் தேர், வாடகைக்கு எடுத்து வரப்பட்டு, திருத்தேர் உற்சவம் நடக்க இருக்கிறது.

அதன்படி, 25 அடி உயர அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், ஸ்ரீதேவி - பூதேவி சமேத உற்சவர் பவள வண்ண பெருமாள், 17 ஆண்டுகளுக்கு பின், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பின், மாடவீதி உலா நடக்கும். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், கோவில் நிர்வாகம் தரப்பில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us