நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 41வயது பெண், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்தவுடன் பைக்கில் வீட்டிற்கு வந்தார்.
தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வரும்போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென அவரது இடுப்பில் சீண்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்ததில், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மர்ம நபர்களை ஆர்.கே.நகர் போலீசார் தேடி வருகின்றனர்.