/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக., 11 வரை சாலைகளில் துாய்மை பணி
/
ஆக., 11 வரை சாலைகளில் துாய்மை பணி
ADDED : ஆக 01, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சியில், ஜூலை 22 முதல், சாலைகளில் தீவிர துாய்மை பணி மற்றும் கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதுவரை, 4.58 லட்சம் கிலோ திடக்கழிவு, 37.03 லட்சம் கிலோ கட்டட கழிவு என, 41.61 லட்சம் கிலோ குப்பை கழிவு அகற்றப்பட்டுள்ளது. மேலும், 688 கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு உள்ளன.
அனைத்து பேருந்து சாலைகளிலும், ஆக., 10 தேதிக்குள் தீவிர துாய்மை பணியை முடிக்க மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.