ADDED : ஆக 30, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று முன்தினம், ரிப்பன் மாளிகை அருகே, வரி உயர்வு, மாநகராட்சி பள்ளி மூடலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
'ஆர்ப்பாட்டத்தின் போது, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ரகுபதி தங்களை ஒருமையில் பேசியும், கையை வைத்து தள்ளியும் விட்டார். மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில செயலர் பாலகிருஷ்ணன் நேற்று, போலீஸ் கமிஷனர் அருணுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

