ADDED : மே 26, 2024 04:03 PM

அ நிறம் | அளவு
நெடுஞ்சாலையில் மாட்டுச்சாணம் கழிவுகளால் கடும் அவதி
சென்னை-- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே வரதராஜபுரம் பகுதியில் தனியார் சிலர் எருமை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இங்கு வளர்க்கும் மாடுகளின் சாணம், நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை முழுதும் உள்ளது. இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் உள்ள சாணத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
