sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'எஸ்கலேட்டர்' அமைக்கும் பணி ஆவடி ரயில் நிலையத்தில் துவக்கம்

/

'எஸ்கலேட்டர்' அமைக்கும் பணி ஆவடி ரயில் நிலையத்தில் துவக்கம்

'எஸ்கலேட்டர்' அமைக்கும் பணி ஆவடி ரயில் நிலையத்தில் துவக்கம்

'எஸ்கலேட்டர்' அமைக்கும் பணி ஆவடி ரயில் நிலையத்தில் துவக்கம்


ADDED : ஏப் 28, 2024 01:09 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில், நான்கு நடைமேடைகள் மற்றும் ஆறு இருப்பு பாதைகள் உள்ளன. ஆவடி மார்க்கமாக, தினமும் 285 மின்சார ரயில்கள் மற்றும் 5 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

மக்கள் ஒன்றாவது நடைமேடையில் இருந்து மற்ற நடைமேடைகளை, விபத்து அபாயத்தில் கடந்து வந்தனர். வயதானோர், கர்ப்பிணியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதற்கிடையில், நான்கு நடைமேடைகளையும் இணைக்கும் விதமாக, 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நடைமேடையில், 50 அடி உயரத்துக்கு, தலா 46 படிக்கட்டுகளுடன் புது நடை மேம்பாலம், கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

அதிக உயரம் காரணமாக, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எவரும் நடைமேம்பாலத்தை பயன்படுத்தவில்லை. மீண்டும் தண்டவாளத்தை கடந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. இதனால், அடிக்கடி விபத்து உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இந்நிலையில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் படிக்கட்டுகள் அமைக்க, ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கின. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us