sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிசை தீக்கிரை

/

குடிசை தீக்கிரை

குடிசை தீக்கிரை

குடிசை தீக்கிரை


ADDED : மார் 01, 2025 01:20 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த பாலவேடு காலனி, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணி, 70; கூலித்தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா, 65. தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்; மகளுக்கு திருமணமாகி விட்டது.

வீட்டில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால், மாடியில் குடிசை அமைத்து மனைவியுடன் மணி தங்கி இருந்தார்.

நேற்று மதியம் 1:00 மணிக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றபோது, குடிசை திடீரென தீப்பிடித்து எரிவதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து, ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அக்கம்பக்கத்தினர், வீட்டில் பேரலில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள், வீட்டு உபயோக பொருட்களுடன் குடிசை தீக்கிரையானது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us