sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புழல் சிறையில் கேன்டீன் திறக்க ஐகோர்ட் உத்தரவு

/

புழல் சிறையில் கேன்டீன் திறக்க ஐகோர்ட் உத்தரவு

புழல் சிறையில் கேன்டீன் திறக்க ஐகோர்ட் உத்தரவு

புழல் சிறையில் கேன்டீன் திறக்க ஐகோர்ட் உத்தரவு


ADDED : ஜூன் 13, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, விசாரணை கைதியான பக்ருதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் 'கைதிகளுக்காக இயங்கி வந்த கேன்டீன், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு விட்டது. கேன்டீன் தொடர்ந்து இயங்கும் வகையில், அதை திறக்க உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார்.

மனு, விடுமுறை கால நீதிபதிகள் சத்தியநாராயண பிரசாத், லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பக்ருதீன் சார்பில், வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, ''கேன்டீன் மூடப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியவில்லை. கேன்டீனை திறக்கக் கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.

சிறை நிர்வாகம் சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, ''கேன்டீன் மூடப்படவில்லை. தற்போதைய நிலை குறித்து, அறிக்கை தாக்கல் செய்கிறேன்,'' என்றார். இதையடுத்து, மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கேண்டீன் மூடப்படவில்லை எனக்கூறி, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் அறிக்கை தாக்கல் செய்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நதியா, புழல் சிறையில் கேன்டீன் நேற்று கூட மூடப்பட்டிருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து, கேன்டீனை திறந்து, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us