sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழில் முனைவோருக்கு கடன் யூனியன் வங்கி சார்பில் முகாம்

/

தொழில் முனைவோருக்கு கடன் யூனியன் வங்கி சார்பில் முகாம்

தொழில் முனைவோருக்கு கடன் யூனியன் வங்கி சார்பில் முகாம்

தொழில் முனைவோருக்கு கடன் யூனியன் வங்கி சார்பில் முகாம்


ADDED : மார் 08, 2025 12:33 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்,மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில், மார்ச் 3 முதல் 7ம் தேதி வரை, தொழில் முனைவோருக்கான முகாம் நடத்தப்பட்டது.

வங்கியின் சென்னை தெற்கு பிராந்தியத்தின் சார்பில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய கிளைகள் வாயிலாக, தாம்பரத்தில் நேற்று, இம்முகாம் நடத்தப்பட்டது.

இதில், கடன் பெற்ற 50 பேருக்கு, அதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கியின் தலைமை அலுவலக முதன்மை பொது மேலாளர் அருண்குமார் பேசியதாவது:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதிலும் இந்நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நிறுவனங்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், எங்கள் வங்கி கிளைகளில் உள்ளன. 20,000 ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறோம். இணையதளம் வாயிலாகவே அனைத்து சேவைகளையும் பெறமுடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us