/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து கத்தி முனையில் காதலியை கடத்திய காதலன் தடுக்க வந்த அக்கா கணவருக்கு வெட்டு
/
வீடு புகுந்து கத்தி முனையில் காதலியை கடத்திய காதலன் தடுக்க வந்த அக்கா கணவருக்கு வெட்டு
வீடு புகுந்து கத்தி முனையில் காதலியை கடத்திய காதலன் தடுக்க வந்த அக்கா கணவருக்கு வெட்டு
வீடு புகுந்து கத்தி முனையில் காதலியை கடத்திய காதலன் தடுக்க வந்த அக்கா கணவருக்கு வெட்டு
ADDED : ஜூன் 20, 2024 12:18 AM
கே.கே.நகர்
சென்னை, கே.கே.நகர், ஜீவானந்தம் சாலை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் லாவண்யா,22. இவர், அதே பகுதியிலுள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
அதே பகுதி, சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த அருள் என்பவரது மகன் அஜய்,23, என்பவரும், லாவண்யாவும் காதலித்து வந்துள்ளனர்.
காதல் விவகாரம் லாவண்யா வீட்டிற்கு தெரிந்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை கருணாகரன் வீட்டில், உறவினர் மாரிமுத்து,29, என்பவருக்கும், லாவண்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது, லாவண்யாவின் காதலன் அஜய், அவரது நண்பர்களான, மதுரவாயல் தனியார் பல்கலையில் பி.பி.ஏ., முதலாமாண்டு படிக்கும் 17 வயது சிறுவர்கள் இருவர் உட்பட நான்கு பேர் அங்கு வந்துள்ளனர்.
பின், கத்தி முனையில் அனைவரையும் மிரட்டி, லாவண்யாவை கடத்தினர்.தடுக்க வந்த லாவண்யாவின் சகோதரி பிரியாவின் கணவர் ரோகித்குமார், 29, என்பவரை கத்தியால் வெட்டிவிட்டு, வீட்டில் இருந்த மின் விளக்குகளையும் நொறுக்கிவிட்டுச் சென்றனர்.
அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரோகித்குமார், கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், 17 வயது சிறுவர்கள் இருவரை கைது செய்தனர்.
லாவண்யா சம்மதத்துடன் சென்றதால், இரு வீட்டாரிடமும் போலீசார் பேச்சு நடத்துகின்றனர்.
வீட்டுக்குள் புகுந்து ரோகித்குமாரை வெட்டியதால், அஜய் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.