நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன், 20. இவர், அம்பத்துாரில் உள்ள பைக் ேஷாரூமில் வேலை செய்து வருகிறார்.
நேற்று தன் வீட்டருகே நின்றிருந்தபோது, இவரை ஐந்து பேர் கும்பல், கத்தியால் வெட்டி தப்பியது.
இதில், கால், முகம் உள்ளிட்ட பகுதியில் காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.