ADDED : ஜூலை 16, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
அடையாறு, சாஸ்திரி நகர் 4வது லேனில், மின் இணைப்பு பெட்டி பாதுகாப்பின்றி திறந்த நிலையில் உள்ளது.
தரையோடு தரையாக உள்ளதால், குழந்தைகள் விளையாட்டுத்தனமாக கை வைத்து விட்டால் உயிருக்கு ஆபத்தான விபரீதம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மூன்று மாதங்களாக மின் வாரிய அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
