sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதந்த மீன்கள்

/

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதந்த மீன்கள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதந்த மீன்கள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதந்த மீன்கள்


ADDED : ஜூன் 01, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் கொசஸ்தலை ஆறு நடுவில் சத்தியமூர்த்தி நீர்தேக்கம் 1944ல் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி.

கோடை வெப்பத்தால் நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீர் ஆவியாகி வருகிறது. கிருஷ்ணா நதி நீர் வரத்தும் இல்லாததால், நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 0.3 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, 357 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, இதே நாளில், 1.09 டி.எம்.சி., அளவிற்கு தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மிக குறைவாக இருப்பதால், இங்குள்ள மீன்கள் செத்து, கரையோரம் மிதந்து, துர்நாற்றம் வீசுகிறது.

பொதுப்பணி - நீர்வள ஆதாரத்துறையினர் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us