/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அன்புள்ள அப்பா என்.கே.எம்., தி.நகரில் பாராயணம்
/
அன்புள்ள அப்பா என்.கே.எம்., தி.நகரில் பாராயணம்
ADDED : செப் 17, 2024 12:33 AM
சென்னை, அன்புள்ள அப்பா என்.கே.எம்., என்ற தலைப்பில், தி.நகரில் நான்கு நாட்கள் பாராயணம் நடக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில், என்.கே.எம்., டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில், 'அன்புள்ள அப்பா - நுாற்றாண்டு என்.கே.எம்.,' என்ற தலைப்பில், தி.நகரில் உள்ள வாணி மஹாலில், நான்கு நாட்கள் பாராயணம் நடக்கிறது.
முதல் நாளான நேற்று காலை 8:15 மணிக்கு, ஸ்ரீமத் நாராயணீயம் பாராயணம் நடந்தது. நிகழ்வில் ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்று காலை 9:15 மணிக்கு, ஏ.எஸ்.ராகவன் சீடர்களின் திருப்புகழ்; நாளை காலை 9:15 மணிக்கு, விஸ்வாஸால் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.
நாளை மறுநாளான 19ம் தேதி காலை 9:15 மணிக்கு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் அபிராமி அந்தாதியும் நடக்கிறது.