ADDED : ஆக 24, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆக. 24-
ஆவடி, கோபாலபுரத்தைச் சேர்ந்த, 41 வயது நபர், ஐந்து நாட்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தனியார் பரிசோதனை மையத்தில் அவருக்கு 'டெங்கு' உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது, 17 மற்றும் 10 வயதுள்ள இரண்டு மகள்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே பகுதியில் வசிக்கும் 30 வயது இளம்பெண்ணுக்கும், மூன்று நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. டெங்கு அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுகிறார். இவரது குழந்தை காய்ச்சல் பாதிப்பால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி சுகாதார நல அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில், '' கொசு ஒழிப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது,'' என்றார்.

