sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அய்யா அவதார திருநாள் ஊர்வலம் 15 கி.மீ., யாத்திரை சென்ற பக்தர்கள்

/

அய்யா அவதார திருநாள் ஊர்வலம் 15 கி.மீ., யாத்திரை சென்ற பக்தர்கள்

அய்யா அவதார திருநாள் ஊர்வலம் 15 கி.மீ., யாத்திரை சென்ற பக்தர்கள்

அய்யா அவதார திருநாள் ஊர்வலம் 15 கி.மீ., யாத்திரை சென்ற பக்தர்கள்


ADDED : மார் 05, 2025 02:20 AM

Google News

ADDED : மார் 05, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி:சென்னை, மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியின், 193வது ஆண்டு அவதார திருநாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பக்தர்கள், பழைய வண்ணாரப்பேட்டை, ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து, அய்யா அருளிச் செய்த அகில திரட்டு ஆகமத்தை பல்லக்கில் வைத்து சுமந்தபடி, ஊர்வலமாக சென்றனர்.

காலை, 5:30 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தை, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் துவங்கி வைத்தார்.

ஊர்வலத்தில், திருநாமக்கொடி ஏந்தியபடி பக்தர்கள் திரளாக பங்கேற்று, அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி, சாரட் வண்டியின் பின், 15 கி.மீ., துாரம் பாதயாத்திரை சென்றனர்.

ஊர்வலம் நல்லப்பவாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக, மதியம் 12:00 மணியளவில், மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது.

ஊர்வலம் செல்லும் வழியெங்கும் பக்தர்களுக்கு சிற்றுண்டி, நீர், மோர் வழங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை மற்றும் அய்யா தொட்டில் வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. பின், வைகுண்ட ஜோதி ஏற்றுதல், இனிமம் வழங்குதல் நிகழ்ச்சியுடன், அய்யா அவதார திருநாள் நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us