/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிராமப்புற ஓட்டுகளை வளைக்க தே.மு.தி.க., - அ.தி.மு.க., திட்டம்
/
கிராமப்புற ஓட்டுகளை வளைக்க தே.மு.தி.க., - அ.தி.மு.க., திட்டம்
கிராமப்புற ஓட்டுகளை வளைக்க தே.மு.தி.க., - அ.தி.மு.க., திட்டம்
கிராமப்புற ஓட்டுகளை வளைக்க தே.மு.தி.க., - அ.தி.மு.க., திட்டம்
ADDED : ஏப் 11, 2024 12:08 AM

திருவாலங்காடு, திருவள்ளூர் தனித் தொகுதி, அ.தி.மு.க., கூட்டணி தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி, பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று, திருவாலங்காடு ஒன்றிய பகுதிகளில் ஓட்டு சேகரிக்க வாகனத்தில் வந்தார். அவருடன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரமணாவும், பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், 'தேர்தலில் களம் காணும் பிரதான வேட்பாளர்கள், கிராமங்களுக்குள் சென்று ஓட்டு கேட்பதில்லை. ஓரிடத்தில் மட்டும் பேசிவிட்டு செல்கின்றனர். கிராமங்களில் இருக்கும் ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும்' என கட்சியினருக்கு கூறி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், பிரதான கட்சி வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்காத பகுதிகளுக்கு நேற்று சென்ற இவர்கள், அங்குள்ள மக்களிடம் ஓட்டு கேட்டனர்.
நார்த்தவாடா, பழையனுார், வியாசபுரம் உட்பட 17 கிராமங்களை தேர்வு செய்து, வாகனங்களிலும், நடந்தும் சென்று பிரசாரம் செய்தனர். இந்த கிராமங்களில் 18 ஆயிரத்து 106 ஓட்டுகள் உள்ளன.
இந்த வாக்காளர்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் கூறினர்.

