sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தி.மு.க., பிரமுகருக்கு வலை

/

தி.மு.க., பிரமுகருக்கு வலை

தி.மு.க., பிரமுகருக்கு வலை

தி.மு.க., பிரமுகருக்கு வலை


ADDED : மே 29, 2024 12:32 AM

Google News

ADDED : மே 29, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கிளியாநகர் ஊராட்சி தலைவியான சித்ரா, தன் கணவர் சுரேஷை, அதே பகுதி யைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய துணை செயலர் தேவ், 50, என்பவர் தாக்கியதாக, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார், கூறியதாவது:

மேல்மருவத்துார் போலீசார், நேற்று முன்தினம், சுரேஷிடம், வேறொரு வழக்கு சம்பந்தமாக, சம்மன் வழங்க ஒரு நபரை பற்றி விசாரித்துள்ளனர்.

அப்போது, தி.மு.க., ஒன்றிய துணைச் செயலரான தேவ்விடம் கேட்கக் கூறி, சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்தபடி போலீசார் தேவ்விடம் விசாரித்தனர். போலீசார் சென்ற பின், சுரேஷ் வேலை செய்த பகுதிக்கு வந்த தேவ், சுரேைஷ பாட்டிலால் தாக்கியுள்ளார்.

இதில், இடது கையில் காயம் ஏற்பட்ட சுரேஷ் மயங்கினார். மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷை தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ள தேவ் என்பவரை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.






      Dinamalar
      Follow us