ADDED : மே 29, 2024 12:32 AM
மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கிளியாநகர் ஊராட்சி தலைவியான சித்ரா, தன் கணவர் சுரேஷை, அதே பகுதி யைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய துணை செயலர் தேவ், 50, என்பவர் தாக்கியதாக, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார், கூறியதாவது:
மேல்மருவத்துார் போலீசார், நேற்று முன்தினம், சுரேஷிடம், வேறொரு வழக்கு சம்பந்தமாக, சம்மன் வழங்க ஒரு நபரை பற்றி விசாரித்துள்ளனர்.
அப்போது, தி.மு.க., ஒன்றிய துணைச் செயலரான தேவ்விடம் கேட்கக் கூறி, சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்தபடி போலீசார் தேவ்விடம் விசாரித்தனர். போலீசார் சென்ற பின், சுரேஷ் வேலை செய்த பகுதிக்கு வந்த தேவ், சுரேைஷ பாட்டிலால் தாக்கியுள்ளார்.
இதில், இடது கையில் காயம் ஏற்பட்ட சுரேஷ் மயங்கினார். மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷை தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ள தேவ் என்பவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.