sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செயற்கை லிகமெண்ட் பொருத்தி ரேலாவில் மருத்துவர்கள் சாதனை

/

செயற்கை லிகமெண்ட் பொருத்தி ரேலாவில் மருத்துவர்கள் சாதனை

செயற்கை லிகமெண்ட் பொருத்தி ரேலாவில் மருத்துவர்கள் சாதனை

செயற்கை லிகமெண்ட் பொருத்தி ரேலாவில் மருத்துவர்கள் சாதனை


ADDED : ஜூன் 23, 2024 01:18 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக, முழங்கால் காயத்திற்கு செயற்கை தசைநாண் பொருத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறியதாவது:

சாலை விபத்தில் சிக்கிய மணிகண்டன், 23, என்பவருக்கு, 'லிகமெண்ட்' என்ற தசைநாண் சேதத்துடன், முழங்கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது.

உடலின் மற்றொரு பகுதியில் இருந்து எடுக்கப்படும், தசைநாண் பயன்படுத்தியே, பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்துவது வழக்கமாக இருந்தது. இந்த சிகிச்சையில், நோயாளிகள் குணமடைவது காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, பிரிட்டனில் இருந்து இறுக்குமதி செய்யப்பட்ட செயற்கை தசைநாண் பயன்படுத்தி, இளைஞருக்கு ஆர்த்ரோஸ்கோபி மருத்துவ செயல்முறையில் பொருத்தப்பட்டது.

இச்சிகிச்சையை, டாக்டர்கள் அசோக், கவாஸ்கர், பார்த்தசாரதி சீனிவாசன், பிரகாஷ் அய்யாதுரை ஆகிய குழுவினர், ஒரு மணி நேரம் மேற்கொண்டனர்.

தற்போது, இயல்பான வாழ்க்கைக்கு அந்த இளைஞர் திரும்பியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக செயற்கை தசைநாண் பயன்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us