sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

20 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்!

/

20 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்!

20 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்!

20 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்!


ADDED : செப் 13, 2024 12:31 AM

Google News

ADDED : செப் 13, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், உலக இயன்முறை சிகிச்சை தின நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், டில்லி வெங்கடேஷ்வரா மருத்துவமனையின் முதுநிலை இயன்முறை டாக்டர் ராஜு பராசர் பேசியதவாது:

உங்களுக்கு கீழ் முதுகில், 48 மணி நேரத்திற்கு மேல் வலி இருந்தால், டாக்டரை ஆலோசிக்க வேண்டும். நீங்களாகவே சிகிச்சை பெறுவது கூடாது. அதேபோல், நடமாடுவதை தவிர்த்து ஓய்வெடுக்கக்கூடாது. அவை, பாதகமாக அமைந்து விடும்.

கீழ் முதுகு வலி என்பது நரம்புகள், தசைகள், எலும்பு மூட்டுகள் சார்ந்த பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வலிக்கு நிவாரணம் கொடுப்பதில், மூளையும் பெரும் பங்கு வகிக்கிறது.

எனவே, 20 நிமிடத்திற்கு மேல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதையோ, உட்கார்ந்து இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.

உட்கார்ந்து இருப்பவர்கள், 20 நிமிடத்திற்குள் சிறிது நேரம் நிற்கலாம். நின்று கொண்டிருப்பவர்களும், சிறிது நேரம் உட்கார்ந்து, தங்களது செயல்பாடுகளில் மாற்றி கொள்வது அவசியம். விளையாட்டில் ஈடுபட்டாலும், அதற்கான உடல் பராமரிப்பு இருப்பது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

போரூர் ராமச்சந்திராவில், இயன்முறை சிகிச்சை தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, புதுடில்லி வெங்கடேஷ்வரா மருத்துவமனை மருத்துவர் ராஜு பராசர் பங்கேற்றார். உடன், இணை துணைவேந்தர் டாக்டர்கள் மகேஷ் வக்கமுடி, ஆன்டனி லியோ ஆசிர் உள்ளிட்டோர்.






      Dinamalar
      Follow us