/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுனர் கவனக்குறைவு தொழிலாளி பலி
/
ஓட்டுனர் கவனக்குறைவு தொழிலாளி பலி
ADDED : செப் 03, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஓட்டேரி, ஒத்தக்கடை தெருவை சேர்ந்தவர் விஜய், 32. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில், சுமை துாக்கும் வேலை செய்தார்.
நேற்று காலை 10:30 மணியளவில், சிம்சன் ரயில்வே வாகன நிறுத்தத்தில், ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்தில் பொருட்களை ஏற்றினார்.
வாகன ஓட்டுனர் சுரேந்திரன், 41, என்பவர், பின்னால் விஜய் நிற்பது தெரியாமல், பின்னோக்கி வாகனத்தை இயக்கினார்.
இதில் வாகனத்தில் சிக்கி படுகாயமடைந்த விஜய், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.