/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர், பெரம்பூரில் மின் குறைதீர் கூட்டம்
/
எழும்பூர், பெரம்பூரில் மின் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 05, 2024 01:32 AM
சென்னை,
எழும்பூர், பெரம்பூர், ஆவடியில் நாளை, 6ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எண் 47, குக்ஸ் ரோடு, மலையப்பன் தெரு, ஓட்டேரி, சென்னை - 12
ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம், முதல் தளம், எண்.229 என்.எம்.சாலை, ஆவடி, சென்னை - 62
பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் செம்பியம் துணைமின் நிலைய வளாகம், எம்.இ.எஸ். ரோடு, சிம்சன் எதிரில், சென்னை - 11
மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பெரம்பூர், ஆவடி, எழும்பூரில் வசிப்போர் பங்கேற்று, மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.