/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏட்டு இறப்பு ரூ.25 லட்சம் நிதியுதவி
/
ஏட்டு இறப்பு ரூ.25 லட்சம் நிதியுதவி
ADDED : செப் 05, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
மீனம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்தவர் ரவிகுமார், 59. நேற்று முன்தினம் காலை, மீனம்பாக்கம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
காலை 11:15 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, சாலையோரம் மயங்கி விழுந்து இறந்தார். இதையறிந்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.