/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : ஜூலை 01, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவான்மியூர், வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 41; எலக்ட்ரீஷியன். இவர். எம்.ஆர்.சி., நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அலுமினிய ஏணியில் ஏறி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி கீழே விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.