ADDED : ஜூலை 02, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஜூலை 2-
கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம் அருகில், 110 கிலோ வோல்ட் திறனில், துணை மின் நிலையம் உள்ளது. அந்த வளாகத்தில் உள்ள மயிலாப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அதில், மயிலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.