/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி
/
மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி
மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி
மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி
ADDED : ஜூலை 03, 2024 12:23 AM
சென்னை, 'இரண்டாவது கட்டமாக கட்டப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளும் இருக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில், சாய்தள வசதி ஏற்படுத்தக் கோரி, வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், ''மெட்ரோ ரயில் நிலையங்களில், சாய்தள வசதிகள் 40 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலிகள் இருந்தும், மாற்றுத்திறனாளிகளால் ரயில் நிலையங்களை பயன்படுத்த முடியவில்லை,'' என்றார்.
தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''தற்போது, இரண்டாவது கட்டமாக மெட்ரோ கட்டுமான பணிகள் நடக்கின்றன.
இந்த ரயில் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடன் கட்டப்படும்,'' என்றார்.
இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட முதல் பெஞ்ச், விசாரணையை தள்ளி வைத்தது.