sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.27 கோடி மோசடி வழக்கு போலி ஆவணம் தயாரித்தவர் கைது

/

ரூ.27 கோடி மோசடி வழக்கு போலி ஆவணம் தயாரித்தவர் கைது

ரூ.27 கோடி மோசடி வழக்கு போலி ஆவணம் தயாரித்தவர் கைது

ரூ.27 கோடி மோசடி வழக்கு போலி ஆவணம் தயாரித்தவர் கைது


ADDED : ஜூலை 16, 2024 12:40 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, நாகப்பட்டினம், ஆலியூர், மேளத்தெருவைச் சேர்ந்தவர் அகமது கபீர், 79. இவர், கடந்த 1996ல், சிங்கப்பூரில் வேலை செய்த போது, மலேஷியாவைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் பழக்கமாகி உள்ளார்.

செல்வேந்திரன் ஆலோசனைப்படி, சென்னையில் உள்ள காதர் என்பவரை பங்குதாரராக சேர்த்து, மூவரும் சேர்ந்து பூந்தமல்லி அடுத்த திருமழிசையில், 2017ல் ஒரு நிறுவனத்தை துவக்கி உள்ளனர்.

பின், 5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய கம்பெனியை, காதர் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து செல்வேந்திரன், அகமது கபீர் இருவருக்கும் உரிய, 'செட்டில்மென்ட்' தொகையை வழங்குவதாக காதர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், காதரிடமிருந்து அகமது கபீருக்கு வர வேண்டிய செட்டில்மென்ட் தொகை, 27 கோடி ரூபாயை, பாஸ்கர் என்பவரின் உதவியுடன், போலி ஆவணங்கள் தயாரித்து செல்வேந்திரன் ஏமாற்றி உள்ளார்.

இதையடுத்து செல்வேந்திரன், பாஸ்கர் ஆகியோர் மீது, ஆவடி குற்றவியல் போலீசாரிடம், அகமது கபீர் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த போலீசார், போலி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்த நாகப்பட்டினம், புலியூரைச் சேர்ந்த பாஸ்கர், 56, என்பவரை நேற்று கைது செய்து, விசாரிக்கின்றனர்.

தலைமறைவான செல்வேந்திரனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us