ADDED : மே 08, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், பழைய வண்ணாரப்பேட்டை, இரட்டைகுழி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 40; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. ஆறு ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த 30ம் தேதி, எருக்கஞ்சேரி, எத்திராஜ் சாமி சாலை, டான் போஸ்கோ பள்ளியில், 'ஷீட்' அமைக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில், தலையில் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று உயிரிழந்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

