/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து
/
எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து
ADDED : ஜூலை 30, 2024 12:31 AM
எழும்பூர், எழும்பூர், போலீஸ் கமிஷனர் பழைய அலுவலகத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது.
அதன் நான்காவது மாடியில், கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் அறை உள்ளது.
இங்குள்ள குளிர்சாதன பெட்டி வெடித்து, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின், தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிந்தது.
இதை பார்த்து பதறியடித்து வெளியேறிய ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த எழும்பூர், திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால், அந்த பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது. அந்த தளத்தில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
எழும்பூர் போலீசார் முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.