sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

/

எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து


ADDED : ஜூலை 30, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழும்பூர், எழும்பூர், போலீஸ் கமிஷனர் பழைய அலுவலகத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது.

அதன் நான்காவது மாடியில், கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் அறை உள்ளது.

இங்குள்ள குளிர்சாதன பெட்டி வெடித்து, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின், தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிந்தது.

இதை பார்த்து பதறியடித்து வெளியேறிய ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த எழும்பூர், திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால், அந்த பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது. அந்த தளத்தில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

எழும்பூர் போலீசார் முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us