ADDED : ஆக 02, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம், திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது, 52. ஜமீன் பல்லாவரம், லத்தீப் சாலையில், 'ஷா பர்னிச்சர்' என்ற பெயரில், ஷோபாக்களை விற்கும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
மின் கசிவு காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.