/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி மீது அவதுாறு மாஜி ஊழியர் கைது
/
பள்ளி மீது அவதுாறு மாஜி ஊழியர் கைது
ADDED : மார் 10, 2025 12:32 AM
பெரம்பூர்,
பெரம்பூர், துளசிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 51; தனியார் பள்ளி தாளாளர். இவரது பள்ளியில், நிர்வாக அதிகாரியாக செந்தில்குமார், 45, பணியில் இருந்தார்.
அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால், 2023ம் ஆண்டு பணியில் இருந்து அவரை நீக்கியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், பள்ளியின் தாளாளரான சீனிவாசன், கணக்காளர் சுசிலா ஆகியோர் பள்ளியில் ஊழல் செய்வதாக, பள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
கடந்த 7ம் தேதி, மீண்டும் மின்னஞ்சல் அனுப்பியதுடன், பள்ளிக்கு நேரில் சென்று மிரட்டியுள்ளார்.
இது குறித்த சீனிவாசன் புகாரையடுத்து, வழக்கு பதிந்த போலீசார், செந்தில்குமாரை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.