ADDED : செப் 07, 2024 12:43 AM
கிண்டி,
விழுப்புரம் மாவட்டம், ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், 19, என்பவர், சென்னையில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கிண்டி எஸ்டேட், பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த ஒரு கும்பல் ராமச்சந்திரனை மிரட்டி மொபைல் போனை பறித்துச் சென்றது.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், 50 என்பவர், ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது, அவரிடமும் அந்த கும்பல் மொபைல் போன் பறித்துள்ளது.
புகாரின் படி, கிண்டி போலீசார் விசாரித்தனர். பரமேஸ்வரனிடம் மொபைல்போன் பறித்து, பைக்கில் தப்பிச் செல்லும் காட்சி அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் சிக்கியது. இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், வழிப்பறி செய்த பரங்கிமலை, நசரத்புரம் பகுதியை சேர்ந்த அஷ்வின்குமார்,24, ஏழுமலை,22, ஜெயபிரகாஷ்,20, விக்னேஷ்,19, ஆகியோர் சிக்கினர். நால்வரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
***