ADDED : செப் 15, 2024 12:20 AM
சென்னை, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் 'மனிதநேய அறக்கட்டளை' நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றவர்களில், 261 பேர் சிவில் நீதிபதிகளாகவும், 286 பேர் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாகவும் உள்ளனர்.
தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 51 அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை- - 2 பதவிக்கான முதல்நிலைத் தேர்வுக்கு, வரும் 21 முதல் இலவச பயிற்சி துவக்க உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் மனிதநேய அறக்கட்டளை இணைந்து நடத்தும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க, மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 -2435 8373, 044 2433 0952, 98404 39393, 84284 31107, 044- 2535 2595 ஆகிய எண்கள் அல்லது www.mntfreeias.com என்ற இணையதளம் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.