sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இ.சி.ஆர்., கால்வாய் பணி தளத்தில் கம்பி, கேபிள்களை திருடும் கும்பல்

/

இ.சி.ஆர்., கால்வாய் பணி தளத்தில் கம்பி, கேபிள்களை திருடும் கும்பல்

இ.சி.ஆர்., கால்வாய் பணி தளத்தில் கம்பி, கேபிள்களை திருடும் கும்பல்

இ.சி.ஆர்., கால்வாய் பணி தளத்தில் கம்பி, கேபிள்களை திருடும் கும்பல்


ADDED : மார் 04, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, இ.சி.ஆரில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.

மேலும், இ.சி.ஆரில் வடியும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாய் செல்லும் வகையில், சாலையின் குறுக்கே மூடு கால்வாயும் அமைக்கப்படுகிறது.

இதற்காக, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், அங்கு வைக்கப்பட்டுள்ளன. இதை, இரவு நேரத்தில், சில இளைஞர்கள் திருடி செல்கின்றனர்.

அதே போல், மூடு கால்வாய் பணி பாதியில் இருக்கும் போதே, அதில் உள்ள கம்பியை ஆஷாபிளேடால் அறுத்து எடுக்கின்றனர்.

மேலும், பள்ளத்தில் பதித்துள்ள தொலைத்தொடர்பு கேபிள்கள், சிறிய குழாய்களை அறுத்து திருடிச் செல்கின்றனர்.

இந்த திருட்டை, சாலை பரபரப்பாக இருக்கும், இரவு 7:00 முதல் 10:00 மணிக்குள் செய்கின்றனர்.

பொதுமக்கள் கேட்டால், பணி செய்யும் ஊழியர்கள் என, பொய் கூறுகின்றனர். பாதி பணியில் உள்ள கம்பியை அறுத்து எடுப்பதால், கால்வாயின் உறுதித்தன்மை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

திருட்டை தடுக்க, கட்டுமான நிறுவனமும், ரோந்து போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us