/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு மருத்துவமனை ஊழியர் சவக்கிடங்கில் தற்கொலை
/
அரசு மருத்துவமனை ஊழியர் சவக்கிடங்கில் தற்கொலை
ADDED : ஆக 08, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் அன்புரோஸ், 32. இவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், கடந்த 15 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, இவர் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில், சவக்கிடங்கில் மதுபோதையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த சக ஊழியர் வெற்றி, ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.