ADDED : ஜூன் 27, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகரில் உள்ள போலீஸ் கன்வென்சன்சென்டரில், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.
முகாமில், பொதுமக்களிடம் இருந்து 55 மனுக்களை கமிஷனர் நேரடியாக பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.
இந்த முகாமில், ஆவடி போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில் உள்ள 25 போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.