ADDED : ஆக 10, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டு, ராமசாமி நகரில், 'அம்மா' உணவகம் இயங்கி வருகிறது.
நேற்று காலை, அம்மா உணவகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே இருந்த துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சிலிண்டர் உள்ளிட்டவை திருடு போயிருந்தன.
அதே போல், அம்மா உணவகம் அருகேயுள்ள விநாயகர் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடு போயிருந்தது.
இவ்விரு சம்பவங்கள் குறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

