/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
/
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
ADDED : ஜூன் 22, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டு, மேலமையூரைச் சேர்ந்தவர் பாலகுமார், 34; தனியார் நிறுவன ஊழியர்.
இவரது மனைவி சுகன்யா, 28. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் மதியம், சுகன்யா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். சுகன்யா தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றபோது, பின்தொடர்ந்து சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, 4 கிராம் தங்க கம்மலை பறித்து தப்பினார்.
செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.