ADDED : மே 31, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார்,எண்ணுார், சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 29. தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கிறார். அவர் மனைவி, ராஜலட்சுமி, 26. இவர்களுக்கு, 2018ல் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட பிரேம்குமார், ஆத்திரத்தில் கத்தியை எடுத்து, தலை, வயிறு, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த ராஜலட்சுமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.