sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தி.நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு வேன் 'பார்க்கிங்' செய்து அடாவடி

/

தி.நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு வேன் 'பார்க்கிங்' செய்து அடாவடி

தி.நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு வேன் 'பார்க்கிங்' செய்து அடாவடி

தி.நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு வேன் 'பார்க்கிங்' செய்து அடாவடி


ADDED : மே 13, 2024 02:01 AM

Google News

ADDED : மே 13, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.நகர்:தி.நகர் முத்துரங்கன் சாலையில் உள்ள மாநகராட்சி நடைபாதை, லோடு வேன் 'பார்க்கிங்' பகுதியாக மாறி உள்ளது.

சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 141வது வார்டு தி.நகரில், முத்துரங்கன் தெரு உள்ளது.

இச்சாலை தி.நகர் மற்றும் கண்ணம்மாப்பேட்டை பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

இந்த சாலையோரம், வரிசையாக மினி லாரிகள் மற்றும் லோடு வேன்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

அத்துடன் இரவு நேரத்தில், அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மறைவில், சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது மற்றும் கஞ்சா புகைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. சில நேரங்களில், அவ்வழியாகச் செல்லும் பெண்களை கிண்டல் செய்வதாகவும் கூறுகின்றனர். இப்பகுதி மக்களின் புகாரையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, கடந்த ஆண்டு மே மாதம் போலீசார் அகற்றினர்.

ஆனால், அடுத்த சில நாட்களில் மீண்டும், நடைபாதையில் லோடு வேன்கள் நிறுத்தப்பட்டன. எனவே, இப்பிரச்னைக்கு போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்ற முடியவில்லை என்றால், நடைபாதையில் வாகனம் நிறுத்த அனுமதி வழங்கி, அதற்கான கட்டணத்தை மாநகராட்சி வசூலிக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us