sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாதவரத்தில் 'ரிவர்ஸ்' வந்த லாரி ஏறி இறங்கி தொழிலாளி பலி

/

மாதவரத்தில் 'ரிவர்ஸ்' வந்த லாரி ஏறி இறங்கி தொழிலாளி பலி

மாதவரத்தில் 'ரிவர்ஸ்' வந்த லாரி ஏறி இறங்கி தொழிலாளி பலி

மாதவரத்தில் 'ரிவர்ஸ்' வந்த லாரி ஏறி இறங்கி தொழிலாளி பலி


ADDED : மே 23, 2024 12:40 AM

Google News

ADDED : மே 23, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்,மாதவரம், லோட்டஸ் காலனி 3வது தெருவில், பிரபல நிறுவனமான ஜூவாரி சிமென்ட் நிறுவன கிடங்கு உள்ளது. அதில், நேற்று முன்தினம் மாலை, லாரியில் இருந்து சிமென்ட் மூட்டைகள் இறக்கப்பட்டன.

அங்கு, மற்றொரு லாரியும் சிமென்ட் மூட்டைகள் இறக்க வந்தது. அதன் போக்குவரத்து வசதிக்காக, ஏற்கனவே அங்கிருந்த லாரியை, அதன் ஓட்டுனர் பின்னோக்கி இயக்க துவங்கினார். அப்போது, லாரியின் தார்ப்பாயை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சுமை துாக்கும் தொழிலாளி பாண்டியன், 55, என்பவர், தடுமாறி கீழே விழுந்தார். இதில், லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பலியானார்.

தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், துாத்துக்குடி, மாதா தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் முருகன், 51, என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 'தார்ப்பாய் மறைத்ததால், அதை அகற்றும் பணியில் இருந்த தொழிலாளி பாண்டியன், லாரியின் பின்னால் இருந்தது தெரியவில்லை' என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us