/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ைசதை விழாவில் துவக்கி வைப்பு
/
பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ைசதை விழாவில் துவக்கி வைப்பு
பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ைசதை விழாவில் துவக்கி வைப்பு
பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ைசதை விழாவில் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 21, 2024 02:36 AM

சைதாப்பேட்டை:தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு பிளஸ் 1 பயிலும் 5.47 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் துவக்க விழா, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்று, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் சா.விஜயராஜ் குமார், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ச.கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
நடப்பு கல்வியாண்டில் 260 கோடி ரூபாய் மதிப்பீடில், 5,47,676 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 30,897 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெறவுள்ளனர்.
'நான் முதல்வன்' திட்டம் 28 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதுமை பெண் திட்டம் வாயிலாக 4,81,705 மாணவியர் பயனடைந்துள்ளனர்.
மேலும், காலை உணவு திட்டம் உலகுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. இதன் எதிரொலியாக, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆவலாக சேர்த்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.