/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் வைகாசி பெருவிழா துவக்கம்
/
வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் வைகாசி பெருவிழா துவக்கம்
வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் வைகாசி பெருவிழா துவக்கம்
வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் வைகாசி பெருவிழா துவக்கம்
ADDED : மே 30, 2024 12:11 AM

வில்லிவாக்கம்,வைகாசி பெரு விழாவை முன்னிட்டு, வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில், நேற்று, துவஜா ரோஹணம் மற்றும் சிம்மவாகன உற்சவம் நடந்தது.
சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள, சவுமிய தாமோதர பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பெருவிழாவை ஒட்டி, 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு வைகாசி பெருவிழாவின் பிரம்மோற்சவம், கடந்த 27ம் தேதி துவங்கியது.
விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் சாமி தாமோதர பெருமாள் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அந்த வகையில், நேற்று காலை, சாமி துவஜா ரோஹணத்தில், சன்னதி தெரு வழியாக கிழக்கு மற்றும் தெற்கு மாடவீதிகள், பாலியம்மன் கோவில் கடந்து வடக்கு மாடவீதி வழியாக வீதியுலா வந்தார்.
பின், மாலை சிம்ம வாகன உற்சவத்தில் எழுந்தருளினார். இன்று காலை கேடயம் உற்சவமும், மாலை ஹம்ஸ வாகன உற்சவத்திலும் சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து, ஜூன் 7ம் தேதி வரை உற்சவம் நடக்கிறது.