/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி ஆற்காடு சுரேஷ் மனைவியிடம் விசாரணை
/
ரவுடி ஆற்காடு சுரேஷ் மனைவியிடம் விசாரணை
ADDED : ஆக 19, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கடந்தாண்டு, ஆக., 18ல், பட்டினப்பாக்கம் அணுகு சாலையில், ரவுடி ஆற்காடு சுரேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் தான், ஜூலை 5ல், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து,10 தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை பிடித்து, சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

